பத்தாவது நாள் பயணம் சன்னாநல்லூர், பூந்தோட்டம், இஞ்சிக்குடி, பேரளம் வழியாக கொல்லுமாங்குடி சென்றடைந்தது. வணிகர்களும் பொதுமக்களும் தமிழ் மீட்பு நிதியத்திற்கு உண்டியலில் பணம் போட்டனர். பல இடங்களில் உழவர்கள் நெல் கொடுத்தனர்.
பதினொன்றாம் நாள் பயணம் மாங்குடி, பில்லூர், பொதும்பூர், கழனிவாசல் வழியாகச் சென்று மாலையில் நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் மங்கைநல்லூரை அடைந்தது. ம.தி.மு.க மாவட்டச் செயலாலர் மகாலிங்கம், குத்தாலம் வட்டச் செயலாளர் மோகன் மற்றும் பல ம.தி.மு.கவினர் பயணக் குழுவினரை வரவேற்றுச் சிறப்பித்தனர்.
பன்னிரண்டாம் நாள் 05.02.2010 நெடுநடைப் பயணக் குழுவினர் எழுமங்கலம் வழியாக மயிலாடுதுறைக்குள் நுழைந்து நாள் முழுக்கப் பரப்புரை செய்து நிதி சேர்த்தனர். அன்று மாலை தமிழின ஆதரவாளர்கள் சார்பில் சின்னக் கடைத் தெருவில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்திற்கு மதிமுக நகரச் செயலாளர் தங்க பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நாக.ரகுபதி, மதிமுக மவட்டச் செயலளர் மகாலிங்கம்,தமிழர் உரிமை மீட்பு இயக்க அமைப்பாளர் முரளிதரன் மற்றும் பலர் உரையாற்றினர்.
பேரசிரியர் த. செயராமன் நெடுநடைப் பயணக் குறிக்கோள்களை ஆதரித்து சிறப்புரை ஆற்றினார். காவிரிச் சிக்கலில் தமிழகம் வஞ்சிக்கப்பட்ட செய்தியை விரிவாக எடுத்துரைத்தார். தோழர் பெ. மணியரசன் நிறைவுரை ஆற்றுகையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும், அப்போது தமிழகத்திற்காகவும் போராட இளைஞர்கள் அணியமாக வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment