தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Thursday, December 2, 2010

மதுரை மாவீரர் நாள் நிகழ்ச்சி

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம் மதுரையில் 27 11 2010 . அன்று மாலை
6 மணிக்குத் திலகா விடுதியில் நடைபெற்றது . கூட்டத்திற்குத் தோழர் கதிர்நிலவன் (மாநகரச் செயலாளர்) தலைமை தாங்கினர் . தோழர் கரிகாலன் முன்னிலை வகித்தார் . வழக்குரைஞர் கதிர்வேல் வரவேற்பு உரை ஆற்றினார் . வழக்கறிஞர் அ க ராமசாமி,(மதுரை மாவட்ட வழக்க‌றிஞர் சங்க செயலாளர் ) மாணிக்கம் (த,தே,இ ) , அரப்பா (பு, க, பே), முருகன் (பு,இ மு ), பொறியாளர் உதயகுமார் , தமிழியம் பறம்பை அறிவன் , வழக்க‌றிஞர்கள் பகத்சிங் அருணாசலம் ,கேசவன் (கு ,பா,ந ), மனுவேல் (த,ஆ,மு ), தங்கபாண்டியன் (மு , ம,எ,பா ), அருணா (மகளிர் ஆயம் ) ஆனந்தன் (த,தே, பொ,க ) மு,கருப்பையா உரையாற்றினார். புலவர் தமிழ்க் கூத்தன் இறுதி உரையாற்றினார் . தோழர் தளபதி நிகழ்ச்சிகளை ஒழுங்கு செயதார்.
கூட்டத்தின் இறுதியில் புலிகளின் அக வணக்கப் பாடலுடன் மெழுகுவர்த்தி ஏந்தி100க்கு மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர் ..





Saturday, October 16, 2010

சமூகநீதித் தமிழ்த் தேசம்


- கலைவேலு

- அறிவுக் கண்ணு

- சிதம்பரம்தம்பி

- ஏதிர்வன்

- செங்காட்டான்

- தியாகு

Thursday, September 16, 2010

தந்தை பெரியார் 132 பிறந்தநாள் சூளுரை

தமிழ்த் தேசியத் தந்தை பெரியாரின் 132 ஆவது பிறந்த நாளில் அவர் கொள்கைச் சுடரேந்தி பயணிப்பது காலத்தின் தேவை. பெரியாரை நினைவுகூர்தல் என்பது அவர் நம்மிடம் கைமாற்றி விட்டுப்போன இலட்சியங்களை வெற்றி பெறச் செய்வதற்கு சூளுரைப்பதே ஆகும். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பெரியார் பிறந்தநாளை(செப்டம்பர் 17) முன்னிட்டு சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை மூலமாக மக்களிடம் பரப்புரை செய்தனர்


Friday, September 10, 2010

தமிழர் எழுவர் விடுதலைக் குரல்

இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 19 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் அல்லலுற்று வருகின்றனர்.

கொடுமையான தடா சட்டத்தின் கீழ் கைதாகி உண்மையான நீதி கிடைக்காமல் தூக்குத் தண்டனையும் வாழ்நாள் சிறைத் தண்டனையும் பெற்றவர்கள் இவர்கள். தமிழர்கள் என்பதினாலேயே எழுவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. இவர்களுக்கு நீதி பெற்றுத் தருவது உலகத் தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும். இவர்களின் விடுதலைக்குக் குரல் கொடுக்கவே தோன்றியுள்ளது தமிழர் எழுவர் விடுதலைக் குரல். இது மனித உரிமைகளுக்கான குரல். மனித உரிமைகளின் மீது பற்றுக் கொண்ட அனைவரின் குரலும் இக் குரலுடன் இணையட்டும். நீதி வெல்லட்டும்


Sunday, September 5, 2010

திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் நூல் அறிமுக நிகழ்வு




Tuesday, June 29, 2010

கோரிக்கைப் பரப்புரை – கையெழுத்து இயக்கம்

ஈரோடு குறுநடைப் பயணத்தைத் தொடர்ந்து சென்னையில் கோரிக்கைப் பரப்புரை கையெழுத்து இயக்கம் தோழர் வா.செல்வகுமார் தலைமையில் 20.06.2010 தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் கோரிக்கைகள் ஆவன.

1. சிங்களப் போரினவாத அரசு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழ் மக்களை இனப் படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த ஏர் – டெல் முதலான இந்தியப் பன்னாட்டுப் பெருங் குழுமங்கள் இன்றளவும் இலங்கைச் சந்தையில் வலைவிரித்து ஆதாய வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இனக்கொலைக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றவும், ஈழத் தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் படியான அரசியல் தீர்வு கிடைக்கச் செய்யவும் வேண்டுமானால், ஏர் – டெல் முதலான நிறுவன்ங்களைப் புறக்கணித்து சிங்கள அரசைப் பொருளியல் வகையில் தனிமைப்படுத்த வேண்டும். இதன் முதற்கட்டமாக ஏர் - டெல் புறக்கணிப்பு இயக்கத்தை முன்னெடுக்கிறொம்.\

2.தமிழ் மக்களின் பொருளியலையும் பண்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் குடிவெறி மென்மேலும் பரவி வருகிறது. அரசே இந்தக் கேட்டினை வளர்க்கும் விதமாக டாஸ்மாக் என்ற பெயரில் சாராயக்கடை நடத்தி வருவது தமிழ் நாட்டையே பாழாக்கி வருகிறது. இந்தக் கொடுமைக்கு உடனே முற்றுப்புள்ளி வைத்திட, டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுமாறும் முழுமையான மதுவிலக்கைச் செயலாக்குமாறும் கோருகிறோம்.

3.சாராயக்கடை நட்த்திக் காசு பார்க்கும் அரசு நம் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்கும் கடமையைப் புறக்கணித்துவிட்டது. அரசின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் கல்விக் கொள்ளையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் கோடிகளை வாரியிறைத்துக் கோவை நகரில் செம்மொழி மாநாடு நடத்தும் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைக் கல்விமொழியாக்க உருப்படியாக எதுவும் செய்துவிட வில்லை. சமச்சீர் கல்வி என்ற பெயரில் அரைமனதாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யானைப் பசிக்குச் சோளப் பொரி என்ற அளவில்தான் உள்ளன. அனைவர்க்கும் கல்வி, அனைத்துக் கல்வியும் தமிழில் என்ற முழக்கத்தைச் செயலாக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தமிழ் வழி சமச்சீர் கல்வி வழங்கிட இந்திய, தமிழக அரசுகளைக் கோருகிறோம்.

4.பணவீக்கம் பத்து விழுக்காட்டைத் தாண்டி பறந்து போய்க் கொண்டிருப்பதாக் அரசின் அறிவிப்புகளிலிருந்தே தெரிகிறது. இன்றியமையாப் பண்டங்களின் மொத்த விலைகளே இந்த அளவுக்கு உயரும் போது சில்லறை விலைகள் உயர்வதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. விண்ணில் பறக்கும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு இணைய வழி (ஆன்லைன்) வணிகம் போன்ற சூதாட்டங்களை அனுமதிப்பதும் ஊக்கப்படுத்தி வருவதும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் தீச்செயல் ஆகும். மக்களுக்கு நெருக்கமான சிறு வணிகர்களை விரட்டியடிக்கும் விதத்தில் ரிலையன்ஸ் போன்ற பெருங் குழுமங்கள் சில்லறை வணிகத்தில் தங்குதடையின்றி நுழைய அனுமதிக்கப்படுகின்றன. விலையுயர்வைக் கட்டுப்படுத்துமாறும், ‘ஆன்லைன்வணிகத்தைத் தடை செய்யுமாறும், சில்லறை வணிகத்தில் பெருங்குழுமங்கள் நுழைவதைத் தடை செய்யுமாறும் கோருகிறோம்.

இந்த நான்கு உடனடிக் கோரிகைகளுக்கும் ஆதரவு தரும் வித்த்தில் கோரிக்கைப் படிவங்களில் கையொப்பமிட வேண்டுகிறோம்.

எமது இயக்கத்தின் தமிழ் மீட்பு நிதியத்திற்குப் பங்களிப்பீர்!

தொடர்புக்கு:

87/31,காமராசர் நகர் 3 ஆம் தெரு,

சூளைமேடு,

சென்னை – 600 094.

பேசி: 044-23610603

Thursday, June 3, 2010

பழங்குடி மக்கள் மீதான ‘பச்சை வேட்டை’ பயங்கரத்துக்கு எதிராக மாபெரும் அரங்கக் கூட்டம்.

தலைமை

தோழர் வேலுச்சாமி ஒருங்கிணைப்பாளர், (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்)

வரவேற்புரை

தோழர் விடுதலை ராஜேந்திரன், (பொதுச்செயலாளர் பெரியார் திராவிடர் கழகம்)

அறிமுக உரை

தோழர் தியாகு ,(தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)

சிறப்புரை

எழுத்தாளர் அருந்ததிராய்,

பேராசிரியர் அமித் பாதுரி, சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுதில்லி

பேராசிரியர் கிலானி, புதுதில்லி பல்கலைக் கழகம்

பேராசிரியர் சாய்பாபா, புதுதில்லி பல்கலைக் கழகம்

நன்றி நவிலல்

தோழர் ரஜினிகாந்த், துணை ஒருங்கிணைப்பாளர், (சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி)

நாள்: 04.06.2010, மாலை 5:00 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேனிலைப் பள்ளி,

திருப்பதி தேவஸ்தானம் எதிரில், 31, வேங்கட நாராயணா சாலை, தி. நகர், சென்னை-17.

அனைவரும் வருக!

நடுவண் அரசே! மாநில அரசுகளே!

சோனியா, மன்மோகன், சிதம்பரம் கும்பலே!

பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்காதே!

வாழ்விடங்களை விட்டு அகற்றாதே!

பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலனுக்காக

சொந்த நாட்டு மக்களின் மீது போரை திணிக்காதே!

போரை நிறுத்து! போராடும் மக்களோடு பேச்சு நடத்து!

நாட்டு பற்றாளர்களே!

பச்சை வேட்டை நடவடிக்கை என்பது...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல!

மக்களுக்கெதிரானப் போர்!

வளர்ச்சிக்கான போரல்ல! ஏகாதிபத்திய கொள்ளைக்கான போர்!

- உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு

தொடர்புக்கு: 96298 68871, 94447 11353

Thursday, May 20, 2010

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்ட நாயகன் பிரபாகரன் – தோழர் தியாகுவின் எழுச்சியுரை

ஈரோடு மாவட்டத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க்க் குறு நடைப் பயண நிறைவு நாள் உரை.

தியாகு1

Get this widget | Track details | eSnips Social DNA

தியகு2

Get this widget | Track details | eSnips Social DNA

தியாகு3

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கிக் கேட்க:

http://www.mediafire.com/?ynmdyjnzo1m

Tuesday, May 18, 2010

குருதி பிசுபிசுக்கும் கொலைகளத்தில் கூத்து, கும்மாளமா? : தடுக்க வேண்டும் தமிழ்த்திரையுலகம்!

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்பிற்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து புதிய ஆதாய வாசல்களைத்) திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலை வீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப் போகும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான கான்ட்ராக்டுகள்மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மூன்று நாள் விழாவில் ஒரு நாள் படங்காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20-20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்திய திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!

ஐய்ஃபாவின் முதல் விருது விழா 2000-ல் லண்டனில் நடைபெற்றது. இது புகழையும், பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சய பாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே, கனடா, தென்கொரியா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத்துறை வளம் கொழிக்கும் என்பது இந்நாடுகளின் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐய்ஃபா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டு களித்தவர்கள் 45 கோடிப் பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குதான்!

இந்த விழாவை நடத்தவிரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபா அமைப்புக்கு 560 கோடி ரூபாய் தரத் தயாராயுள்ளன. அய்ஃபா-2010 விழாவை நடத்துவதற்கான போட்டியில் அயர்லாந்துதான் 2009 இறுதிவரை முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்திய தரப்பு அதிகார பூர்வமாக வழங்கியது.

2010 பெப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான் கொழும்பு பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும் செய்யப்பட்டு விட்டது. இது இலங்கையின் மாபெரும் உலக சாதனைஎன்று சொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா.

கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யா ராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதைஉலகமே பார்க்க உதவப் போகிறார்களாம். உலக மக்கள் தீர்ப்பாயம் (People’s Tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி அழகும் அமைதியும்அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும்.

தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)

சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித் திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக் கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் ராவணன்கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக / கேளிக்கை வணிகப்பிரிவின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் இவரையும் ரஜினியையும், ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. தமிழன் இரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள் தானா கிடைத்தோம்என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்த செய்திகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.

ஆனால் இது போதாது. தமிழ்த் திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ளவிடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழ் உறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?

இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி தமிழ்த் திரையுலகம் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. இராமேசுவரத்துக்குச் சென்று சிங்களவனுக்குக் கேட்கட்டும் என்று குரல் கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழுவலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து விடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.

நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சை அயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயல்படவேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகு

சீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது அதை ஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயரெல்லாம் மறந்துவிட்டது. திபெத்தில் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரல் பெய்ச்சுதங் பாட்டியாவின் பெயர் எல்லாருக்கும் நினைவிருக்கிறது.

பாட்டியாவால் சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் மனம் வைத்தால் ஐய்ஃபா 2010 கொழும்பில் நடைபெறாமல் தடுக்க முடியும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவு தருமாறு அழைக்கிறேன்.

கவிஞர் தாமரை

Thursday, May 6, 2010

கொட்டும் மழையிலும் கொள்கை மறவர்கள்

அடுத்த நாள் காலை(29.04.10) அந்தியூரில் இருந்து புறப்பட்ட பயணக்குழு சின்னத்தம்பி பாளையம், அத்தானி ஆகிய ஊர்களைக் கடந்து நண்பகல்வாக்கில் கள்ளிப்பட்டியை வந்தடைந்தது. நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் பயணத் தோழர்களை வரவேற்று நண்பகல் உணவளித்தார். பகல் ஓய்வுக்குப் பின் புறப்பட்ட தோழர்கள் துரையம்பாளையம், பங்களாப்புதூர், தூக்கநாயக்கன் பாளையம் ஆகிய் ஊர்களின் வழியாக இரவு ஏழூர் வந்தடைந்தனர்.

அந்தியூருக்கும் ஏழூருக்கும் இடையேயான தொலைவு ஏறத்தாழ 30 கி.மீ ஆகும். குறுநடைப்பயணத்தில் இது ஒரு நீண்ட பயணமே. மக்கள் தொண்டர்களுக்கு நெடுநடைப் பயணமும் குறுநடைப் பயணமும் ஒன்றே. மக்கள் தொண்டாற்றக் கிடைத்த வாய்ப்பே.

வழிநெடுகத் துண்டறிக்கை வழங்கியும் உண்டியல் ஏந்தியும் வந்தனர் தோழர்கள். அத்தானியிலும் தூக்கநாயக்கன் பாளையத்திலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தோழர் பாரதி ஏறிவரும் விலைவாசி, மின்வெட்டு, கல்வி வணிகமயமாக்கல், நளினி விடுதலை, ஈழ மக்கள் துயர் ஆகியன குறித்து விரிவாகப் பேசினார். இரவுணவும் தோழர் செழியனால் வழங்கப்பட்டது.

30.04.10 வெள்ளி காலையில் ஏழுரில் இருந்து கிளம்பிய தோழர்கள் நால்சாலை(ரோடு), பெரியகொடிவேரி கடந்து நண்பகலில் கொடிவேரி அணையை வந்தடைந்தனர். இப் பயணத்தில் காலை உணவு தோழர்களுக்குப் பழைய சோறாக இருந்தது. இரவு மிஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் அதை அமுதாக உண்ட தோழர்களின் மனப் பக்குவத்தை எப்படிப் புகழ்வது?.




கொடிவேரி அணையில் ஆடைகளைத் துவைத்தும் நீந்திக் குளித்தும் களைப்பைப் போக்கினர் பயணக் குழுவினர். வெயிலில் களைத்து வந்த தோழர்களைக் கொடிவேரி அணை தாயாக அணைத்து மகிழ வைத்தது.



மாலையில் கொடிவேரி அணையில் இருந்து புறப்பட்ட பயணக் குழுவினர் ஒட்டர்பாளையம் வழியாக ம. குமாரபளையம் வந்தடைந்தனர் அங்கு மொழிப்போர் ஈகி முத்து நினைவுக் கல்வெட்டு முன் நின்று உறுதிமொழி ஏற்றனர். இந்நினைவுக் கல்வெட்டு புரட்சிகர இளைஞர் முன்னணியும், தமிழர் பண்பாட்டுக் கழகமும் இணைந்து உருவாக்கியதாகும்.

அங்கிருந்து புறப்பட்ட தோழர்களைச் சத்தியமங்கலம் வாசலிலேயே கொட்டும் மழை இடி முழங்க வரவேற்றது. கத்திரி வெயிலில் காய்ந்து கருகிய தோழர்களை ஒருவகையில் இம் மழை குளிவித்தது என்றே கூறலாம். மக்கள் தொண்டர்களைக் கண்டு மழையும் மனம் இரங்கியதோ ?.

ஆனால் மழை மேலும் கனக்க கனக்க சாலையில் நடப்பதும் சிரமம் ஆனது. மழையில் நடக்கத் தடுமாறிய தோழர்களை ஊர்தியில் ஏற்றி அனுப்பி விட்டு கொட்டும் மழையிலும் கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர் மற்ற தோழர்கள். இரவுத் தங்கலுக்காகச் சத்தியமங்கலத்தைக் கடந்து கெஞசனூர் சென்றது பணக்குழு. இப்பயணத் தொலைவும் ஏறத்தாழ 30 கி.மீட்டருக்கும் கூடுதலே. காந்தளகம் புத்தக நிலைய உரிமையாளர் திரு. ஆறுமுகம் தோழர்களை வரவேற்று இரவு உணவளித்தார்.



இரவு மழையாகப் போனதால் சத்தியமங்கலத்திற்குள் பரப்புரை மேற்கொள்ள முடியாமல் போனது. அதனால் காலையில் தோழர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒரு குழு சத்தியமங்கலத்திற்குள் பரப்புரை மேற்கொள்வது எனவும் மற்றொரு குழு நடைபயணத்தை தொடர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தோழர்களுக்குக் காலை உணவைத் தமிழர் பண்பாட்டுக் கழகத் தோழர் கிருட்டிணசாமி வழங்கினார்.

சத்தியமங்கலத்தில் இருந்து கோபி வரை மேற்கொண்ட மே நாள் குறுநடைப் பயணமும் 29 கி.மீட்டரைத் தொட்டது. அரியப்பம் பாளையம், மூலக்கிணறு, கொத்துக்காடு, இண்டியம் பாளையம், அரசூர், மா. கோம்பை, சிங்கிரிபாளையம், காசிபாளையம், கரட்டடிபாளையம் ஆகிய ஊர்களில் பரப்புரையும் நிதி தண்டலும் செய்தனர் தோழர்கள். கோபியில் மே நாள் விடுமுறை என்பதால் குறைவான கடைகளே திறந்திருந்தன. இப்பயணத்தில் பகல் உணவும் இரவுணவும் ம.தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ம.கந்தசாமி அவர்களால் வழங்கப்பட்டது.

மே நாளுக்கு அடுத்த நாளும் விடுமுறை நாளாக (ஞாயிறு) அமைந்ததால் பரப்புரையும் தண்டலும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. இவ்வேமாற்றத்தைப் போக்குவதாக அமைந்தது இரவு நடைபெற்ற மே நாள் சிறப்பு – குறுநடைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம்.

பொதுக்கூட்டதிற்கு ம.தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ம.கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் இரவி வரவேற்புரை ஆற்றினார். நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன், பெரியார் திராவிடர் கழக் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வழக்குரைஞர் ப.பா.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் குமரவேல் நன்றியுரை வழங்க பொதுக்கூட்டம் நிறைவுற்றது.

கோபியில் இரு நாள்களும் இரவு தங்குவதற்கு தி.மு.க இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் குமணன் தாய்த் தமிழ்ப் பள்ளியை ஏற்பாடு செய்திருந்தார். இரண்டாம் நாள் காலை உணவையும் பகல் உணவையும் செழியன் வழங்கினார்.