

இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் 19 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் அல்லலுற்று வருகின்றனர்.
கொடுமையான தடா சட்டத்தின் கீழ் கைதாகி உண்மையான நீதி கிடைக்காமல் தூக்குத் தண்டனையும் வாழ்நாள் சிறைத் தண்டனையும் பெற்றவர்கள் இவர்கள். தமிழர்கள் என்பதினாலேயே எழுவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. இவர்களுக்கு நீதி பெற்றுத் தருவது உலகத் தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகும். இவர்களின் விடுதலைக்குக் குரல் கொடுக்கவே தோன்றியுள்ளது தமிழர் எழுவர் விடுதலைக் குரல். இது மனித உரிமைகளுக்கான குரல். மனித உரிமைகளின் மீது பற்றுக் கொண்ட அனைவரின் குரலும் இக் குரலுடன் இணையட்டும். நீதி வெல்லட்டும்

இந்த நான்கு உடனடிக் கோரிகைகளுக்கும் ஆதரவு தரும் வித்த்தில் கோரிக்கைப் படிவங்களில் கையொப்பமிட வேண்டுகிறோம்.
எமது இயக்கத்தின் தமிழ் மீட்பு நிதியத்திற்குப் பங்களிப்பீர்!
தொடர்புக்கு:
87/31,காமராசர் நகர் 3 ஆம் தெரு,
சூளைமேடு,
சென்னை – 600 094.
பேசி: 044-23610603
தலைமை
தோழர் வேலுச்சாமி ஒருங்கிணைப்பாளர், (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்)
வரவேற்புரை
தோழர் விடுதலை ராஜேந்திரன், (பொதுச்செயலாளர் பெரியார் திராவிடர் கழகம்)
அறிமுக உரை
தோழர் தியாகு ,(தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)
சிறப்புரை
எழுத்தாளர் அருந்ததிராய்,
பேராசிரியர் அமித் பாதுரி, சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுதில்லி
பேராசிரியர் கிலானி, புதுதில்லி பல்கலைக் கழகம்
பேராசிரியர் சாய்பாபா, புதுதில்லி பல்கலைக் கழகம்
நன்றி நவிலல்
தோழர் ரஜினிகாந்த், துணை ஒருங்கிணைப்பாளர், (சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி)
நாள்: 04.06.2010, மாலை 5:00 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேனிலைப் பள்ளி,
திருப்பதி தேவஸ்தானம் எதிரில், 31, வேங்கட நாராயணா சாலை, தி. நகர், சென்னை-17.
அனைவரும் வருக!
நடுவண் அரசே! மாநில அரசுகளே!
சோனியா, மன்மோகன், சிதம்பரம் கும்பலே!
பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்காதே!
வாழ்விடங்களை விட்டு அகற்றாதே!
பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலனுக்காக
சொந்த நாட்டு மக்களின் மீது போரை திணிக்காதே!
போரை நிறுத்து! போராடும் மக்களோடு பேச்சு நடத்து!
நாட்டு பற்றாளர்களே!
பச்சை வேட்டை நடவடிக்கை என்பது...
பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல!
மக்களுக்கெதிரானப் போர்!
வளர்ச்சிக்கான போரல்ல! ஏகாதிபத்திய கொள்ளைக்கான போர்!
- உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு
தொடர்புக்கு: 96298 68871, 94447 11353
ஈரோடு மாவட்டத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க்க் குறு நடைப் பயண நிறைவு நாள் உரை.
தியாகு1
Get this widget | Track details | eSnips Social DNA
தியகு2
Get this widget | Track details | eSnips Social DNA
தியாகு3
Get this widget | Track details | eSnips Social DNA
பதிவிறக்கிக் கேட்க:
குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்பிற்கு மாற்றியுள்ளனர்.
தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து புதிய ஆதாய வாசல்களைத்) திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலை வீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப் போகும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ‘கான்ட்ராக்டுகள்’ மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மூன்று நாள் விழாவில் ஒரு நாள் படங்காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20-20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்திய திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!
ஐய்ஃபாவின் முதல் விருது விழா 2000-ல் லண்டனில் நடைபெற்றது. இது புகழையும், பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சய பாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே, கனடா, தென்கொரியா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் ‘இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத்துறை வளம் கொழிக்கும் என்பது இந்நாடுகளின் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐய்ஃபா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டு களித்தவர்கள் 45 கோடிப் பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குதான்!
இந்த விழாவை நடத்தவிரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபா அமைப்புக்கு 560 கோடி ரூபாய் தரத் தயாராயுள்ளன. அய்ஃபா-2010 விழாவை நடத்துவதற்கான போட்டியில் அயர்லாந்துதான் 2009 இறுதிவரை முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்திய தரப்பு அதிகார பூர்வமாக வழங்கியது.
2010 பெப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான் கொழும்பு பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும் செய்யப்பட்டு விட்டது. ‘இது இலங்கையின் மாபெரும் உலக சாதனை’ என்று சொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா.
கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யா ராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் ‘அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதை’ உலகமே பார்க்க உதவப் போகிறார்களாம். உலக மக்கள் தீர்ப்பாயம் (People’s Tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி ‘அழகும் அமைதியும்’ அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும்.
தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)
சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித் திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக் கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் ‘ராவணன்’ கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக / கேளிக்கை வணிகப்பிரிவின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் இவரையும் ரஜினியையும், ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. ‘தமிழன் இரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள் தானா கிடைத்தோம்’ என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்த செய்திகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.
ஆனால் இது போதாது. தமிழ்த் திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ளவிடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழ் உறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?
இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி தமிழ்த் திரையுலகம் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. இராமேசுவரத்துக்குச் சென்று சிங்களவனுக்குக் கேட்கட்டும் என்று குரல் கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழுவலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து விடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.
நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சை அயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயல்படவேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகு
சீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது அதை ஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயரெல்லாம் மறந்துவிட்டது. திபெத்தில் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரல் பெய்ச்சுதங் பாட்டியாவின் பெயர் எல்லாருக்கும் நினைவிருக்கிறது.
பாட்டியாவால் சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் மனம் வைத்தால் ஐய்ஃபா 2010 கொழும்பில் நடைபெறாமல் தடுக்க முடியும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவு தருமாறு அழைக்கிறேன்.
கவிஞர் தாமரை
அந்தியூருக்கும் ஏழூருக்கும் இடையேயான தொலைவு ஏறத்தாழ 30 கி.மீ ஆகும். குறுநடைப்பயணத்தில் இது ஒரு நீண்ட பயணமே. மக்கள் தொண்டர்களுக்கு நெடுநடைப் பயணமும் குறுநடைப் பயணமும் ஒன்றே. மக்கள் தொண்டாற்றக் கிடைத்த வாய்ப்பே.
வழிநெடுகத் துண்டறிக்கை வழங்கியும் உண்டியல் ஏந்தியும் வந்தனர் தோழர்கள். அத்தானியிலும் தூக்கநாயக்கன் பாளையத்திலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தோழர் பாரதி ஏறிவரும் விலைவாசி, மின்வெட்டு, கல்வி வணிகமயமாக்கல், நளினி விடுதலை, ஈழ மக்கள் துயர் ஆகியன குறித்து விரிவாகப் பேசினார். இரவுணவும் தோழர் செழியனால் வழங்கப்பட்டது.
30.04.10 வெள்ளி காலையில் ஏழுரில் இருந்து கிளம்பிய தோழர்கள் நால்சாலை(ரோடு), பெரியகொடிவேரி கடந்து நண்பகலில் கொடிவேரி அணையை வந்தடைந்தனர். இப் பயணத்தில் காலை உணவு தோழர்களுக்குப் பழைய சோறாக இருந்தது. இரவு மிஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் அதை அமுதாக உண்ட தோழர்களின் மனப் பக்குவத்தை எப்படிப் புகழ்வது?.
கொடிவேரி அணையில் ஆடைகளைத் துவைத்தும் நீந்திக் குளித்தும் களைப்பைப் போக்கினர் பயணக் குழுவினர். வெயிலில் களைத்து வந்த தோழர்களைக் கொடிவேரி அணை தாயாக அணைத்து மகிழ வைத்தது.
மாலையில் கொடிவேரி அணையில் இருந்து புறப்பட்ட பயணக் குழுவினர் ஒட்டர்பாளையம் வழியாக ம. குமாரபளையம் வந்தடைந்தனர் அங்கு மொழிப்போர் ஈகி முத்து நினைவுக் கல்வெட்டு முன் நின்று உறுதிமொழி ஏற்றனர். இந்நினைவுக் கல்வெட்டு புரட்சிகர இளைஞர் முன்னணியும், தமிழர் பண்பாட்டுக் கழகமும் இணைந்து உருவாக்கியதாகும்.
ஆனால் மழை மேலும் கனக்க கனக்க சாலையில் நடப்பதும் சிரமம் ஆனது. மழையில் நடக்கத் தடுமாறிய தோழர்களை ஊர்தியில் ஏற்றி அனுப்பி விட்டு கொட்டும் மழையிலும் கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர் மற்ற தோழர்கள். இரவுத் தங்கலுக்காகச் சத்தியமங்கலத்தைக் கடந்து கெஞசனூர் சென்றது பணக்குழு. இப்பயணத் தொலைவும் ஏறத்தாழ 30 கி.மீட்டருக்கும் கூடுதலே. காந்தளகம் புத்தக நிலைய உரிமையாளர் திரு. ஆறுமுகம் தோழர்களை வரவேற்று இரவு உணவளித்தார்.
சத்தியமங்கலத்தில் இருந்து கோபி வரை மேற்கொண்ட மே நாள் குறுநடைப் பயணமும் 29 கி.மீட்டரைத் தொட்டது. அரியப்பம் பாளையம், மூலக்கிணறு, கொத்துக்காடு, இண்டியம் பாளையம், அரசூர், மா. கோம்பை, சிங்கிரிபாளையம், காசிபாளையம், கரட்டடிபாளையம் ஆகிய ஊர்களில் பரப்புரையும் நிதி தண்டலும் செய்தனர் தோழர்கள். கோபியில் மே நாள் விடுமுறை என்பதால் குறைவான கடைகளே திறந்திருந்தன. இப்பயணத்தில் பகல் உணவும் இரவுணவும் ம.தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ம.கந்தசாமி அவர்களால் வழங்கப்பட்டது.
மே நாளுக்கு அடுத்த நாளும் விடுமுறை நாளாக (ஞாயிறு) அமைந்ததால் பரப்புரையும் தண்டலும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. இவ்வேமாற்றத்தைப் போக்குவதாக அமைந்தது இரவு நடைபெற்ற மே நாள் சிறப்பு – குறுநடைப் பயண விளக்கப் பொதுக்கூட்டம்.
பொதுக்கூட்டதிற்கு ம.தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ம.கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் இரவி வரவேற்புரை ஆற்றினார். நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன், பெரியார் திராவிடர் கழக் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வழக்குரைஞர் ப.பா.மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் குமரவேல் நன்றியுரை வழங்க பொதுக்கூட்டம் நிறைவுற்றது.
கோபியில் இரு நாள்களும் இரவு தங்குவதற்கு தி.மு.க இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் குமணன் தாய்த் தமிழ்ப் பள்ளியை ஏற்பாடு செய்திருந்தார். இரண்டாம் நாள் காலை உணவையும் பகல் உணவையும் செழியன் வழங்கினார்.